11 ஜூன் 2014

சாட்சி சொல்ல இருந்தவர் படுகொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி முருகன் கோவிலின் பூந்தோட்டத்திலிருந்து சித்தாண்டி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய சாமித்தம்பி விநாயகம் என்பவர் சடலமாக புதன்கிழமை (11.06.14) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.சித்தாண்டி முருகன் கோவில் சம்பந்தப்பட்ட வழக்கொன்று தொடர்பில் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திற்கு சாட்சியாக இவர் இன்றையதினம் சமூகமளிக்கவிருந்தாரென உறவினர்கள் தெரிவித்ததாக சித்தாண்டி 03 பிரிவு கிராம அலுவலகர் த.சுதாகரன் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக