26 ஜூன் 2014

அனந்தி எழிலனை பின்தொடரும் இருவர்!

தென்னிலங்கையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் இனந்தெரியாத நபர்கள் இருவர் தன்னைப் பின்தொடர்வதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக குறித்த நபர்கள் தன்னை பின்தொடர்ந்து வருவதாகவும், தான் விஜயம் செய்யும் பகுதிகளுக்குச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே போடப்பட்டிருந்த சிறீலங்கா காவல்துறை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான இனந்தெரியாத நபர்களின் பின்தொடர்தல் தன்னை அச்சமடைய வைக்க சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இருக்கலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்ததில் இருந்து இனந்தெரியாத நபர்கள் இருவர் என்னைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
பின்தொடரும் நபர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கில் தென்னிலங்கையில் பதிவு செய்யப்பட்டதற்கான ( WP XI) இலக்கத்தகடு பொருத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக