30 ஜூன் 2014

ஈழ இளைஞன் பலி!உறவினர் போராட்டம்!

மருத்துவ கவனிப்பின்றி ஈழ அகதி இந்தியாவில் சாவு; உறவினர்கள் மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம்!சரியாக மருத்துவ கவனிப்பு வழங்கப்படாத காரணத்தால் இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அத்துடன் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புதுப்பற்றில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜீ.சந்திரசேகரன் (வயது - 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வயிற்று வலி காரணமாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கூடத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஊசி மருந்து ஏற்றப்பட்டது என்றும் அதன்பின்னரே உடல் வலி அதிகரித்து அவர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கு பிரதான வைத்தியர் இல்லாத நிலையில் அவருக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் சந்திரசேகரன் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 200 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்துடன் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருத்துவ கவனக்குறைவு குறித்து அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் கே.வரதராஜன் தெரிவித்தார். சந்திரசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக இந்திரா காந்தி அரச பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக