08 ஜூன் 2014

நியுசிலாந்து நீதிபதி ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தலைமையேற்கிறார்!

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா நிபுணர் குவின் தலைவராக, நியுசிலாந்தைச் சேர்ந்த டேம் சில்வியா கார்ட்ரைட் என்ற முன்னாள் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
70 வயதான டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றியவராவார்.
இவரது தலைமையிலான ஐ.நா நிபுணர்குழுவின் விசாரணை வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது.
தனது பெயரை வெளியிட விரும்பாத முன்னாள் ஐ.நா அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார், நியுசிலாந்தின் முதல் பெண் மாவட்ட நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்.
இவர் நீதிபதியாக இருந்த போது, மிகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக பல கௌரவ விருதுகளையும் பெற்றவர்.
பின்னர், 2001ம் ஆண்டில் இருந்து2006ம் ஆண்டு வரை இவர் நியுசிலாந்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக