25 ஜூன் 2014

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரம் வாயால் வர்ணிக்க முடியாது!ஜெனீவாவில் யுவதி சாட்சியம்!

முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்களைக் கொன்றுதான் அந்த இடத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்ததை நான் நேரில் பார்த்தேன் என முள்ளிவாய்காலில் இருந்து உயிர் தப்பி ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழ் யுவதி ஒருவர் ஜெனீவாவில் சாட்சியம் அளித்துள்ளார்.
நாங்கள் எங்களுடைய பாதுகாப்புத் தேடி இரட்டை வாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் நோக்கிச் சென்ற போது, வழியில் அதிகளவான பிணங்கள் காணப்பட்டன. பெருமளவானோர் காயப்பட்ட நிலையில் எந்தவொரு மருத்து வசதிகளும் அற்ற நிலையில் காணப்பட்டார்கள்.
சாப்பாட்டுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பட்டினி கிடக்கும் அளவுக்கு அங்கு நிலைமை காணப்படவில்லை. ஆகக் குறைந்த கஞ்சி ஆவது குடிக்கக்கூடியதாக இருந்தது. உணவுக்காக வரிசையில் காந்திருந்த மக்கள் மீது மயக்கக் குண்டுகள் வீசி பெருமளவான மக்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தார்கள்.
நான் எனது பெற்றோருடன் முள்ளிவாய்க்காலில் இருந்த போது 2009 ஆண்டு மே 14ஆம் நாள் மற்றும் 15 ஆம் நாள் பெருமளவில் பிணங்களே அப்பகுதியில் காணப்பட்டன.
நாங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்காக வட்டுகாகலுக்குச் சென்றபோது விடுதலைப் புலிகள் மாதிரி மாற்றப்பட்ட இராணுவத்தினர் மக்களையும் போரளிகளையும் சுட்டுக்கொன்றார்கள். இதனால் நாங்களும் நூற்றுக்கு மேற்பட்ட மக்களும் 17 ஆம் நாள் புதுக்குடியிருப்புத் திசை நோக்கிச் செல்லலாம் எனச் சென்றபோது வழியில் காணப்பட்ட சிறு சிறு பற்றைக்குள் பெண் பிள்ளைகளின் உடல்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது. (வாயால் வர்ணிக்க முடியாது)
அப்பகுதியில் தலைப்பாகை கட்டிய இந்திய இராணுவத்தினர் ஒத்த இராணுவத்தினர் இருந்ததை நான் நேரில் கண்டேன். அவர்கள் எல்லோரும் உயரமாகக் கணப்பட்டார்கள். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் வித்தியாசமாகவே இருந்தது.
https://www.youtube.com/watch?v=G3L61Jah1sY
இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுக்கலால் காட்டிக்கொடுப்புகள் நிகழ்த்தப்பட்டு பிடிச்சுச் செல்லப்பட்டவர்களை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அடித்தார்கள். அவர்களின் வாய்களிலிருந்து இருந்து இரத்தம் வழிந்ததை நான் அவதானித்தேன்.
இராமநாதன் அகதி முகாமில் புலனாய்வு இராணுவத்தினரால் தனது நீண்டகால நண்பியும் போராளியுமான சந்தியாவை விசாரணைக்கு அழைத்து தேநீருக்குள் மயக்க மருந்து கொடுத்து மயக்கப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டுள்ளார். இவ்வாறு 7 பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதேநேரம் இராணுவதினர் கூறும் இடங்களுக்கு எனது நண்பியின் தந்தை சந்தியாவை அழைத்து செல்வார். தந்தைக்கும் மகளின் நிலைமை தெரியும் ஆனால் அங்கு ஒன்றுமே செய்ய முடியாது. இவ்வாறு சிறீதர் தியேட்டர், பலாலி படை முகாம், தெல்லிப்பளைப் படை முகாம் எனப் பல முகாங்களுக்கு இராணுவத்தினரின் பாலியல் தேவைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். என பல விடயங்களை அவர் ஜெனீவாவில் சாட்சியமாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக