
இந்த ஆண்டு மார்ச் மாத அமர்வுகளின் போது அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவிற்கான பிரதிநிதிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதிநிதிகள் தெரிவின் பின்னர், ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிற்கு பிரதிநிதிகள் அறிமுகம் செய்து வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக் குழுவுடன் இலங்கை உத்தியோகபூர்வமான தொடர்புகளைப் பேண வேண்டுமென நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக