13 ஜூன் 2014

ஊர்காவற்றுறையில் இப்படியும் அசிங்கக்கூட்டமா?

யாழ்,ஊர்காவற்றுறை கல்வந்தாழ்வுப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து தனியார் கல்வி நிலையம் சென்றுள்ளார்.
அப்போது இம் மாணவியைப் பின் தொடர்ந்து வந்த இரு காவாலிகள் மாணவியை முந்திச் சென்று ஆள் நடமாற்றம் அற்ற பகுதி வந்தவுடன் மாணவியை மறித்து தமது ஆடைகளை களைந்து காட்டியுள்ளனர்.இதனால் பெரும் அச்சத்துக்கு உள்ளான மாணவி அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார். அப்போது அந்த மாணவியைத் துரத்திய இரு காவாலிகளும் சனநடமாட்டம் கண்டவுடன் அவ்விடத்தை விட்டு ஓடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதையடுத்து தப்பிச்சென்ற மாணவி பெற்றோரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிசாரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 18, 19 வயதான இரு காவாலிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக