01 ஜூன் 2014

சிறீலங்கா விமானப்படைத் தளபதி மரணம்!

air_chief_marshal_m.j.t._de_s._gunawardenaசிறிலங்கா விமானப்படையின் எட்டாவது தளபதியான எயர் சீவ் மார்சல் ரெறன்ஸ் குணவர்த்தன நேற்று காலமானார். இரண்டாம் ஈழப்போர் காலத்தில் இவரே சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். 1990 ஓகஸ்ட் 1ம் நாள் தொடக்கம் 1994 பெப்ரவரி 16ம் நாள் வரை இவர் சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
பெல் உலங்குவானூர்திகள் மற்றும் சியாமாசெற்றி குண்டுவீச்சு விமானங்களுடன் செயற்பட்ட சிறிலங்கா விமானப்படை, இவரது காலகட்டத்திலேயே நவீன மயப்படுத்தப்பட்டது.
புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்கள் என்பனவும், எம்.ஐ.- 17 உலங்கு வானூர்திகளும் இவரது காலத்தில் சிறிலங்கா விமானப்படையால் கொள்வனவு செய்யப்பட்டன.
இவரது பதவிக்காலத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் வடக்கில் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக