10 செப்டம்பர் 2013

மகிந்தவும் சரத்தும் சர்வதேச நீதிமன்றில் ஏறும் காலம் தொலைவில் இல்லை!

சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளிகள் என்பதை நாங்கள் நேரடியாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த இருவரும் அப்பாவித் தமிழ் மக்களை கொண்று குவித்து யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதிற்கு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றங்களை ஒப்புக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. சரத் பொன்சேகா யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருக்கும் போதே அதிகமான இளைஞர்கள் யுவதிகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டனர். அதே போன்று ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். அதற்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளது. காலம் வரும் போது, அதை உரியவர்களிடம் கையளிப்போம் என திரு.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,யாழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்கள் யாரும் சிங்கள இராணுவத்திடம் சரணடையவில்லை என சரத் பொன்சேகா கூறியமை குறிப்பிடத்தக்கது.
பலத்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக