17 செப்டம்பர் 2013

கூட்டமைப்பே வெற்றி பெறும்-யாழ்,ஆயர்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நெதர்லாந்து தூதுவரிடம் அடித்துக் கூறினார் யாழ்.மறை மாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை."முன்னரும் தமிழ் மக்களின் கட்சியே வெற்றி பெற்றது. இந்த முறையும் தமிழ் மக்களின் கட்சிதான் வெல்ல வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்'' என்று அவர் மேலும் கூறினார்.வட மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நெதர்லாந்துத் தூதுவர் லூயிஸ் பியர் மற்றம் தூதரக அரசியல் விவகாரச் செயலாளர் மீனி லங்கோ ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.இவர்கள் நேற்று மாலை யாழ்.ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்புக் குறித்து யாழ்.ஆயர் தெரிவித்தமை வருமாறு:நெதர்லாந்து அற்கு நான், முன்னரும் தமிழ் மக்களின் கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. அவ்வாறு தான் நடைபெற வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெல்லும் என்று கூறினேன். மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் இருக்கின்றனர். இந்ரசின் நிதியுத வியில் புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் யாழ். கோட்டையின் நிர்மாணப் பணிகளுக்காக தூதுவருக்கு நன்றி தெரிவித்தேன். இதனை அரசிடம் ஒப்படைக்காமல் யாழ்.மாநகர சபையிடம் ஒப்படைத்தால், எல்லா மக்களும் சென்று வரக் கூடியதாக இருக்கும் என்று கூறினேன். நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர் என அவர்களிடம் தெரிவித்தேன். இதன் போது வட மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்று நெதர்லாந்துத் தூதுவர் என்னிடம்ட கேட்டார். அததத் தேர்தல் இரா ணுவத்தினரின் தலையீடு இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.இங்கு சுமுகமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றே தாங்களும் விரும்புவதாகத் தூதுவர் என்னிடம் தெரிவித்தார் என்றார்.நெதர்லாந்து தூதுவர் நாளை வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக