21 செப்டம்பர் 2013

அஞ்சல் வாக்களிப்பு: வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி பெருவெற்றி!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குமான அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து மாவட்ட அஞ்சல் வாக்களிப்பிலும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றுள்ளது.

அஞ்சல் வாக்களிப்பில் அதிகபட்சமாக யாழ்.மாவட்டத்தில் 86 வீதமான வாக்குகளை தமிழரசுக் கட்சி அள்ளியுள்ளது.

மன்னார் மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 1300 வாக்குகள் -70.19 %
ஐ.ம.சு.மு. - 408 வாக்குகள் -22.03 %
முஸ்லிம் காங்கிரஸ் – 135 வாக்குகள் -7.29 %
ஐ.தே.க. - 07 வாக்குகள்
பதிவான வாக்குகள் - 1869
நிராகரிக்கப்பட்டவை –17
செல்லுபடியானவை – 1852

யாழ்.மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 7625 வாக்குகள் - 86.30 %
ஐ.ம.சு.மு - 1099 வாக்குகள் - 12.44 %
ஐ.தேக. - 35 வாக்குகள்
சுயே.குழு.6 -16 வாக்குகள்
சுயே.குழு.7 -12 வாக்குகள்
பதிவான வாக்குகள் - 8949
நிராகரிக்கப்பட்டவை – 114
செல்லுபடியானவை – 8835

வவுனியா மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 901 வாக்குகள் - 66.94 %
ஐ.ம.சு.மு. - 323 வாக்குகள் -24.00 %
ஐ.தே.க - 65 வாக்குகள் - 4.83 %
முஸ்லிம் காங்கிரஸ் – 24 வாக்குகள்
ஜேவிபி -15 வாக்குகள்
ஜ.க -12 வாக்குகள்
சுயே.குழு.6 - 05 வாக்குகள்
பதிவான வாக்குகள் – 1,371
நிராகரிக்கப்பட்டவை – 25
செல்லுபடியானவை – 1,346

கிளிநொச்சி மாவட்டம் - அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 756 வாக்குகள் - 82.26 %
ஐ.ம.சு.மு - 160 வாக்குகள் - 17.41 %
ஐ.தே.க - 01 வாக்கு
ஜ.ஐ.மு -01 வாக்கு
இ.தொ.க -01 வாக்கு
பதிவான வாக்குகள் - 929
நிராகரிக்கப்பட்டவை – 10
செல்லுபடியானவை – 919

முல்லைத்தீவு மாவட்டம் - அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 646 வாக்குகள் - 81.26 %
ஐ.ம.சு.மு - 146 வாக்குகள் - 18.36 %
ஐ.தே.க - 02 வாக்குகள்
ஜனநாயக கட்சி – 1 வாக்கு
பதிவான வாக்குகள் - 800
நிராகரிக்கப்பட்டவை – 05
செல்லுபடியானவை – 795

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக