07 செப்டம்பர் 2013

கூட்டமைப்புக்கு அமோக வரவேற்பளித்தனர் யாழ்,வணிகர்கள்!

யாழ். நகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று (07) காலை 10 மணியளவில் நகர் புற கடைகளை சுற்றி வலம் வந்தனர்.
நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குமாறு யாழ். நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று கடை உரிமையாளர்கள் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
யாழ். நகர வர்த்தக சங்க தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இ.ஜெயசேகரன் தலைமையில் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோரே நகர் புற கடைகளை சுற்றி வந்து தமக்கான ஆதரவை திரட்டி கொண்டனர்.
இதன்போது கடை உரிமையாளர்கள் ஊழியர்கள் இவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, வெடி கொளுத்தி, வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக