29 செப்டம்பர் 2013

மஹிந்தரை திக்குமுக்காட வைத்த பான் கீ மூன்!

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்காவின் அரசியலமைப்புக்குட்பட்ட தேர்தலை நடத்திய மஹிந்த அரசாங்கம் படுதோல்வி கண்டது.
பாரிய தோல்வி முகத்துடன் நிவ்யோர்க் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பலதரப்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என மஹிந்தவிடம், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கேள்வி எழுப்பியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. செயலாளரின் கேள்விக்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, போர் முடிவடைந்த 4 வருட காலப்பகுதிக்குள் வட மாகாண அபிவிருத்திக்காக 300 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் ஒதுக்கப்படும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி என்ற வகையில் தான், அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனிடம், ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்துள்ளாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக