28 செப்டம்பர் 2013

வடக்கு மாகாண தேர்தல் சதித்திட்டம்-வைகோ

வடக்கு மாகாண சபைத் தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். 13வது சட்டத் திருத்தத்தை தமிழர்கள் ஏற்காத சூழலில் அச்சட்டத்தை இல்லாது செய்வதற்காக இலங்கை ஐனாதிபதி அரசு களம் இறங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காக்க தவறிய பான் கி மூன் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டுமெனில் அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்பதுடன் இலங்கை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக