14 செப்டம்பர் 2013

வடக்கு மக்களை மிரட்டுகிறார் பசில்-விக்கிரமபாகு

வடக்கு மக்களை அச்சுறுத்துவதற்காகவே வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தில் இருந்து தான் விலக போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்குள் சென்றால் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகளை நிறுத்த போவதாக அமைச்சர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
வடக்கின் வசந்தம் தொடர்பான நிதியத்தை வைத்திருக்க வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ வடபகுதி மக்களிடம் கூறியுள்ளார். மத்தியஸ்தர் ஒருவரிடம் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளதன் பின்னணியில் வடக்கு மாகாண சபைத் தேர்தலே இருக்கின்றது.
அரசாங்கம் வழங்கும் நிதியுதவி தொடர்ந்து கிடைக்க வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் தெரிவித்திருப்பது அருவருக்கதக்கது என்பதுடன் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் விக்ரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக