11 செப்டம்பர் 2013

சோனியாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!

அமெரிக்காவில் சிகிச்சைக்காகச் சென்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, 1984 டில்லி சீக்கியர் படுகொலை வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் ஒன்று விசாரணைக்கான அழைப்பாணை பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து பதிலளித்த இந்தியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி.நாராயணசாமி, இந்த வழக்கு குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.
ஆனால் சோனியா காந்தி தேசிய வழிகாட்டுதல் கவுன்சிலின் தலைவர் என்ற வகையில் அவருக்கு இந்திய அரசும் அனைத்து சட்டரீதியான உதவிகளையும் தரும் என்றார்.
சீக்கியர்கள் படுகொலை சம்பவம் குறித்த பல்வேறு வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன, சஜ்ஜன் குமார் கீழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு மீது அரசே மேல் முறையீட்டைச் செய்திருக்கிறது.
ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்கு நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
ஆனல் அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு விளம்பரத்துக்காகத் தொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவு
அமெரிக்காவில் ஒரு மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் மருத்துவமனைக்கோ அல்லது அவருடன் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ இந்த அழைப்பாணையை வழங்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு என்ற காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் அமைப்பு ஒன்று, இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறது.
சோனியா காந்திக்கு எங்கு சென்று சிகிச்சை பெறுகிறார் எதற்காக சிகிச்சை பெறுகிறார் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக