09 செப்டம்பர் 2013

இந்து முறைப்படி திருமணம் செய்தார் இஸ்லாமிய ஆசிரியர்!

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி ஊரவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் இன்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
இது குறித்த மேலும் தெரியவருவதாவது
ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியர் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுடன் காதல்வயப்பட்டிருந்தார். கிராம மக்களின் கவனத்தை ஈர்த்த காதலர்களது விடயம் தீருமண பதிவுக்கு முடிவானது. குறித்த காதலன் தமிழ் பெண்ணை திருமணம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்து கரம்பிடித்துக்கொண்டுள்ளார்.
இதன் படி இவர்களுக்கான திருமணத்தை இந்துமத முறைப்படி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் அவர்கள் நடாத்திவைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக