20 செப்டம்பர் 2013

துப்பாக்கிகளின் நிழலில் தேர்தல் வாக்களிப்பு!

சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் வடபுலத்தில் சிறிலங்கா அரச நிர்வாக கட்டமைப்பின் ஒர் அங்கமான வட மாகாண சபைத் தேர்தல் நிலைவரம், அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றுள்ளது.
துப்பாக்கிகளின் நிழலின் கீழ் இலங்கைத் தமிழர்களின் வாக்களிப்பு என தனது வர்ணனையினை வரைந்துள்ள அனைத்துலக செய்திநிறுவனமான (AFP) ஏஎவ்பி, இராணுவ அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் அழிவுகள் மற்றும் போருக்கு பிந்திய அதிகாரப் பகிர்வு முயற்சிகளுக்கு மத்தியில், வட இலங்கையில் உள்ள தமிழ் வாக்காளர்கள் தங்களுக்கான அரை அதிகார சபைக்கான தேர்தலை எதிர்கொள்கின்றனர் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கோட்டையாக அன்று விளங்கிய இப்பகுதியில், அனைத்துலக அழுத்தங்களின் காரணமாக இந்த தேர்தலை சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துகின்றார் எனவும் ஏஎவ்பி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
போர் குற்றங்கள் குற்றச்சாட்டுக்கள் பின்தொடர்கின்ற நிலையில் ,பல லட்சம் மக்களை சுற்றி இராணுவம் தன்னுடைய இருப்பை இப்பகுதியில் பராமரித்து வருவதாகவும் அச்செய்திக்குறிப்பில் ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழர்களின் வாக்களிப்புக்கு இராணுவ வெளியேற்றத்தினை தமிழர் தரப்பு வேண்டி நிற்பதாக மற்றுமொரு அனைத்துலக செய்தநிறுவனமான ரொய்ரெர்ஸ் செய்தி வரைந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக