13 ஜூலை 2014

மகிந்தவே 2022வரை ஜனாதிபதி என்கிறார் ஹெகலிய!

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த உடன் மக்களிடம் சென்று 2022ம் ஆண்டு வரை நாட்டை எழுதி எடுத்து கொள்ளுங்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே 2022 ம் ஆண்டு இந்த நாட்டின் ஜனாதிபதி என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்ள சூட்சுமமான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
200க்கும் அதிகமான இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நடவடிக்கை தற்பொழுது செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க சந்தை சந்தையாக சென்றாலும் அவருடன் மக்கள் இல்லை. இதனால் அரசாங்கத்தின் மீது சேறுபூசி வருகின்றனர்.
200க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் தினமும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன.
மக்கள் இருக்கும் சகல இடங்களுக்கும் தமது பிரதிநிதிகளை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது.
ஜே.வி.பியும் இதற்கு பங்களிப்பு செய்கிறது. இவற்றுக்கு பதிலளிக்க எமக்கு அறிவு இருப்பதாக நம்புகிறோம்.
போரில் வென்றாலும் போர் வெற்றியின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி வருகின்றனர். போரில் வென்றதன் பிரதிபலன்களை நாம் அனுபவித்து வருகின்றோம் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கண்டி கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்திய பின்னர், எந்த தேர்தலையாவது நடத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த உடன் மக்களிடம் சென்று 2022ம் ஆண்டு வரை நாட்டை எழுதி எடுத்து கொள்ளுங்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே 2022 ம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதி எனவும் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக