25 ஜூலை 2014

இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே,நான் ஒரு கிறிஸ்தவ இந்து!

"இந்தியா இந்து தேசமாகத்தான் இருக்கிறது.. இந்தியர்கள் அனைவருமே இந்துஸ்தானில் வாழும் இந்துக்களே என்று கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசா கூறியுள்ளார். கோவா அமைச்சர் தீபக் தவலிகர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியாவை இந்துராஷ்டிரமாக்கி காட்டுவார் என்று கூறியிருந்தார். நாடு முழுவதும் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கோவா துணை முதல்வர் டிசோசாவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிசோசா, இந்தியா என்பது இந்து தேசமாகத்தான் இருக்கிறது.. இந்து தேசமாகவே இருக்கும். இனிதான் இந்து தேசம் உருவாக்க வேண்டும் என்பதில்லை. இதுதான் இந்துஸ்தான். நான் உட்பட அனைத்து இந்தியர்களும் இந்துக்களே.. நான் ஒரு கிறிஸ்தவ இந்து" என்றார். கோவாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை இன தலைவர்களில் மிகவும் மூத்தவர் டிசோசா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக