06 ஜூலை 2014

பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதாக யாழில் இளைஞர்கள் கைது!

யாழ். நகரப்பகுதியில் சிவில் உடையில் நின்றிருந்த சிங்களப் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ் இளைஞர்கள் இருவர் நேற்றிரவு கைதாகியுள்ளனர். யாழ்.பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகாகவுள்ள புல்லுக்குளம் பகுதியில் நின்றிருந்த இரு பொலிசார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்த முற்பட கற்களால் வீசியதில் பொலிசார் ஒருவரது மண்டை உடைந்து படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த புல்லுக்குளம் பகுதியில் சிவில் உடையினில் பொழுது போக்கிக்கொண்டிருந்த இரு பொலிசார் குறித்த தமிழ் இளைஞர்கள் இருவருடனும் முரண்பட்டுள்ளனர். இதைனையடுத்து பரஸ்பரம் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையிலேயே பின்னர் கற்களால் வீசியதாக தெரியவருகின்றது. இதையடுத்து அருகிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் உதவி கோரியதையடுத்து திரண்டு சென்றவர்கள் குறித்த இளைஞர்களை கைது செய்ததுடன் கடுமையாக தாக்கியுமுள்ளனர் எனத் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக