14 ஜூலை 2014

காரைநகரில் கொலையிலிருந்து காப்பாற்றப்பட்ட இளைஞன்!

தமது நண்பனான ஒருவரை திட்டமிட்ட முறையில் கொலை செய்வதற்கு முயன்ற இருவா் வட்டுக் கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனா். கசூரினாக் கடற்கரையில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் அங்குள்ளவா்களைப் பரபரப்புக்குள்ளாக்கியது.
தமது நண்பனான இளைஞா் ஒருவருக்கு மதுவை நன்றாக குடிக்கக் கொடுத்து அவன் போதையில் இருக்கும் போது கடலில் அழுத்திக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனா் நான்கு நண்பா்கள். இத் திட்டமிடலை நன்றாகச் செயற்படுத்தி அவனை குறித்த நால்வரும் கடலுக்குள் அமுக்கிக் கொண்டிருந்த போது அங்கு நின்ற பொதுமக்கள் கண்டு கூக்குரல் இட்டு கத்தியபோது அப்பகுதியில் நின்ற மீனவா்கள் சிலா் குறித்த இடத்திற்கு விரைந்து சென்று மூழ்கிக் கொண்டிருந்திருந்த நண்பனைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனா். குறித்த நான்கு பேரையும் பொதுமக்கள் பிடிக்கத் துரத்திய போது அவா்களில் இருவா் பிடிக்கப்பட்டனா். மற்றைய இருவரும் ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது.
இவா்களை அங்கு வந்த வட்டுக்கோட்டைப் பொலிசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனா். இது தொடா்பாக வட்டுக் கோட்டைப் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா் என குறிப்பிடப்படுகிறது.குறித்த நான்கு பேரும் கொக்குவில் பகுதியைச் சோ்ந்தவா்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக