23 ஜூலை 2014

யாழ்,பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!

பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!யாழ்,பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது. நெல்லியடிப் பகுதியில் வசிக்கும் நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. விடிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் "மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்" என்று அவர் பதிவிட்டுள்ளாராம். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.யாழ்,பல்கலை மாணவர்களின் தொடர் மரணங்கள் தமிழ் சமூகத்திற்கே பேரிடியாய் அமைந்துள்ளது.மரணங்களின் மர்மங்கள்தான் துலங்காமல் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக