26 ஜூலை 2014

பிதிர்க்கடன் தீர்க்க கீரிமலையில் குவிந்தனர் தந்தையை இழந்தோர்!

கீரிமலையில் பிதிர்க்கடன் கழிக்க திரண்டனர் பல்லாயிரம் பேர்!
(கீரிமலை)படம்-மலரும்.கொம்
கீரிமலையில் பிதிர்க்கடன் கழிப்பதற்கு சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இன்று சனிக்கிழமை திரண்டு பெற்றோர்களுக்கான பிதிர்க் கடன்களைக் கழித்தனர். அதிகாலை முதல் கீரிமலையில் கூடிய மக்கள் கீரிமலை கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட பிதிர்க்கடன் சாலைகளில் தானம் கொடுத்து தமது பெற்றோர்களை நினைந்து பிதிர் கடன்களை நிறைவேற்றினர். கீரிமலை கேணியிலும் கடலிலும் புனித நீராடி இன்று பிதிர்க்கடன் தீர்த்தனர்.உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் இந்துக்கள் இன்று உபவாசம் இருந்து பிரிந்து விட்ட தமது தந்தையரை நினைந்து பிதிர்க்கடன் நிறைவேற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக