11 ஜூலை 2014

நயினை நாகபூஷணி அம்பாள் தேர் இன்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. 16 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. நாளை 12ஆம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும். இன்றைய தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளிள் அருளாசியைப் பெற்றனர். நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் நயினை நாகபூஷணி அம்மனைத் தரிசிக்க அடியார்கள் திரண்டிருந்தனர். பக்தர்களின் போக்குவரத்து வசதி கருதி விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக