16 ஜூலை 2014

குளிப்பதை பார்த்ததாக கூறி கள் இறக்கும் தொழிலாளி மீது தாக்குதல்!

சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல் பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அலறியுள்ளார்.
சங்கானைப் பகுதியில் பெண் யுவதி ஒருவர் குளிப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்து கள் இறக்கும் தொழிலாளி கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது சைக்கிளும் அடித்து நொருக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த வீட்டில் நின்ற உறவினர்கள் அந் நபரை கீழே இறக்கி கடுமையாகத் தாக்கி கட்டி வைத்திருந்துள்ளனர். தான் கள் இறக்கும் தொழிலாளி என்றும் தென்னை மரத்தில் ஏறி கள் இறக்கிக் கொண்டிருந்த போதே பெண் கத்தியதாகவும் இவர் தெரிவித்தும் அதைக் கேளாது குறித்த நபரைத் தாக்கி யுள்ளனர். அத்துடன் அவரது சைக்கிளும் அடித்து நொருக்கப்பட்டது.
அதன் பின்னர் குறித்த நபரைப் காவல்துறையிடம் கொடுப்பதற்கு எத்தனித்த போது குறித்த பெண்ணின் அயல் வீட்டில் இருந்தவர்கள் அந்த நபர் வழமையாக அங்கு வந்து கள் இறக்குவதாகத் தெரிவித்தும் அவரது நடவடிக்கை தவறானதாக இவ்வளவு காலமும் இருந்ததில்லை எனத் தெரிவித்ததால் எச்சரிக்கை செய்ய ப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த கள் இறக்கும் தொழிலாளியின் சகோதரிகள் இருவர் அங்கு வந்து வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பத்துடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதையும் அயலவர்கள் தடுத்து நிறுத்தி அடித்து நொருக்கப்பட்ட சைக்கிளுக்கு அதைத் திருத்துவதற்கான பணத்தையும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக