12 ஜூலை 2014

வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் படுகாயம்!

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் கிராமத்தருகே விறகு எடுக்கச் சென்ற இரு தாய்மார்கள் வெடிவிபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 5.30மணியளவில் விறகு எடுப்பதற்காக ஆனந்தபுரம் 5ம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஐவர் மந்துவில் பகுதிக்கு சமீபமாக உள்ள சிறிய காட்டுப் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர்.
அங்கு விறகு வெட்டும்போது அவர்கள் பயன்படுத்திய கோடரி ஒன்று வெடிபொருள் ஒன்றில் பட்டதும் அது வெடித்துச் சிதறியிருக்கின்றது.
சம்பவத்தில் ஆறு பிள்ளைகளின் தாயாரான சீவரத்தினம் அம்பிகா (வயது 50) மற்றும் மூன்று பிள்ளைகளின் தாயரான பிரியதர்சினி (வயது 24) ஆகியோரே படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில்
அவர்களில் அம்பிகா என்ற பெண் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக