22 ஜூலை 2014

மாணவியை கடத்திச்சென்றது வெள்ளைவான் கும்பல்!

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் சிலாபத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருக்கிறார். பாடசாலை முடிந்தபின் தன்னுடனும் மற்றுமொரு மாணவியுடனும் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தபோது இனந்தெரியாத சிலரால் தனது மகள் கடத்தப்பட்டார் என அந்த மாணவியின் தந்தை சிலாபம் பொலிஸில் நேற்றிரவு முறைப்பாடு செய்துள்ளார். கடத்தியவர்கள் பற்றியோ கடத்தப்பட்ட மாணவி பற்றியோ இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், அவர்களைத் தேடிப்பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக