02 ஜூலை 2014

சிங்களப்படைக்கு பயிற்சியை நிறைவு செய்த தமிழ்ப்பெண்கள்!

சிறீலங்காவின் தரைப்படைக்கு புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை(02.07.14)தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர்.
முல்லைத்தீவு படைத்தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள்,தரைப்படையின் பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் படையில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத கால பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனராம்.
முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் சிங்கள கட்டளை தளபதி (இன அழிப்பாளன் என குற்றம் சாட்டப்படுகின்ற) மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் சிங்களப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக