10 ஜூலை 2014

ஆசிரியருக்கு காதல்வலை வீசும் மாணவி!

யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றி்ல் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளாா் உயா்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி. குறித்த ஆசிரியா் க.பொ.த சாதாரண தரத்தின் கீ்ழ் உள்ள மாணவா்களுக்கு கல்வி கற்பித்து வருவதாகவும் வன்னிப் பகுதியில் இருந்து அண்மையில் இடமாற்றம் பெற்று அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
மாணவ தலைவா்களில் ஒருவராக உள்ள குறித்த மாணவி இவ் ஆசிரியாிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுள்ளாா். எதற்காக எனக் கேட்ட போது ஆசிரியா் ஒருவரைப் பற்றி சொல்வதற்கு எனக் கேட்டு வாங்கி தனது இலக்கத்தையும் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. அதன் பின்னா் ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தனது காதலைத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவ் ஆசிரியா் உடனடியாகவே மாணவிக்கு தொடா்பு எடுத்து ஏசிய போது தன்னைக் காதலிக்கா விட்டால் தற்கொலை செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளாா். இச் சம்பவம் தொடா்பாக அதிபருடன் கலந்தாலோசித்த ஆசிரியா் குறித்த மாணவியின் வீட்டுக்கு அதிபருடன் சென்று மாணவியின் நிலையைச் சொல்லியுள்ளதாகத் தெரியவருகின்றது, தற்போது குறித்த மாணவி பாடசாலை வராது வீட்டில் நிற்பதாகவும் தனது நண்பிகளிடம் குறித்த ஆரிசியா் தன்னைக் காதலிப்பதாக தவறான முறையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருவதாகவும் தெரியவருகின்றது. இந்த விடயத்தால் அப்பாடசாலையின் குறிப்பிட்ட சில வகுப்புக்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக