21 ஜூலை 2014

இந்தியாவும் ஐ.நா.விசாரணையாளர்களை அனுமதிக்காதாம்!

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஐந்து நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
குறித்த விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா அனுமதி கோரிய போதிலும், இந்தியா அதற்கு அனுமதியளிக்கவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
மூன்று நிபுணர்கள் மற்றும் 13 பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு இலங்கை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்,இந்தியா ஏற்கனவே குறித்த விசாரணைக் குழுவிற்கு வீசா வழங்க மறுத்துள்ள நிலையில், ஏனைய அண்டை நாடுகளும் அதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்
இலங்கைக்கு அருகாமையில் உள்ள நாடொன்றிலிருந்து விசாரணைகளை நடாத்தவே ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினர் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானும் தனது இலங்கை தொடர்பிலான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாவும் 
முதல் தடவையாக சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக