15 ஜூலை 2014

காங்கிரஷ் செய்ததைத்தான் மோடி அரசும் செய்கிறது!

ஈழத்தமிழர் பிரச்னை விடயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் என்ன நிலைப்பாடு இருந்ததோ, அதே நிலைப்பாடுதான் தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள மோடி அரசிடமும் உள்ளது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன். கரூரில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு:- 'இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை அமைத்த விசாரணை குழுவை இலங்கை அரசு மறுத்து விட்டது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்திய மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமை குழு தேவையற்றது என்ற நிலையில் உள்ளது. மத்திய அரசின் இந்த போக்கு உலக தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிற்கு சொந்தமான ஒரு தீவை, வேறு ஒரு நாட்டிற்கு வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக