30 ஜூலை 2014

பிரித்தானிய யுவதி மீது கிழக்கில் பாலியல் துஷ்பிரயோகம்!

பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (29.07.14) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில், உல்லை அறுகம்பை பிரதேசத்திலேயே இந்த துஷ்பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடலில் பல காயங்களுடன் நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் (29.07.14) பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த பிரித்தானியப் பெண், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரவு 7.30 மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக