01 மே 2013

சரப்ஜித் சிங் மூளைச்சாவு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 1990ம் ஆண்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 பேர் இறந்தனர். இதற்கு காரணமானவர் என்று குற்றம்சாட்டி இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் (49) கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் கடந்த வெள்ளிக்கிழமை சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜின்னா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார். சரப்ஜித்தை பார்க்க மனைவி சுக்பிரீத் கவுர், மகள்கள் ஸ்வபன்தீப், பூனம், சகோதரி தல்பீர் கவுர் ஆகியோர் லாகூர் சென்றுள்ளனர். இதற்கிடையே, சரப்ஜித் மூளைச்சாவு அடைந்து விட்டதாக பாகிஸ்தான் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சரப்ஜித் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக