06 மே 2013

நீதிபதி புரிந்த அநீதி!

இலங்கை மேன்முறையீட்டு நீதவான் ஒருவர் இந்திய விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தண்ணீர் போத்தலினால் சக நீதவான்களை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் மாநாடு ஒன்றுக்காக இந்தியா சென்று நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட நீதவானின் இந்த நடவடிக்கையினால் விமான நிலையத்தில் குழுமியிருந்த ஏனைய பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையைச் சேர்ந்த சக நீதவான்களை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பத்து நிமிடங்களுக்கு மேல் கடும் சொற்களினால் குறித்த நீதவான் திட்டித் தீர்த்ததாக பெங்களுர் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் உச்ச கட்டமாக கையில் வைத்திருந்த தண்ணீர் போத்தலினால் நீதவான் ஒருவரைத் தாக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக