28 மே 2013

பிக்குவின் இறுதிச்சடங்கை இன்றே நடத்த ஏற்பாடு!

கண்டி தலதா மாளிகை முன்பாக தீக்குளித்து இறந்த பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்கை இன்றே நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடைசெய்யக் கோரி தீக்குளித்த வண.போவத்தை இந்திரரத்ன தேரரின் இறுதிச்சடங்கை காரணமாக வைத்து, கடும் போக்குவாத பௌத்த பிக்குகளும், பேரினவாதிகளும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் நாளை இரத்தினபுரி கஹவத்தையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பெளத்த பிக்குவின் இறுதிச்சடங்கை அவசர அவசரமாக இன்றே நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு மூலம் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரத்தினபுரி காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவுக்கமைய இன்று பிற்பகல் 4 மணியளவில் பிக்குவின் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது.
இந்த இறுதிச்சடங்குகளின் போது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பிலும் இரத்தினபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இறைச்சிக்கடைகள் மூடுமாறு பெளத்த பிக்குகளும், சிங்கள அடிப்படைவாதக் குழுக்களும் மிரட்டல்களை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக