யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை முதல் இடிமின்னலும் மழை தொடர்கின்றது. இதனால் பல்வேறு இடங்களில் காற்று பலமாக வீசியதனால் மரங்கள் முறிந்து வீதிகளில் காணப்படுவதுடன் பொது மக்களுடைய வீடுகளது தகரங்களும் காற்றினால் அள்ளுண்டு போயுள்ளன.
இதேவேளை, காலை 6.30 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்த வேளை இந்த ஆலயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளயது.
இதில் ஆலய முகப்பில் இருந்த கார்மேல் மாதாவின் முகம் மின்னல் காரணமாக சிதைவடைந்துள்ளதுள்ளதுடன் ஆலயமும் இடிந்துள்ளது.
எனினும் ஆலயப் பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ். வல்வெட்டித்துறையில் இன்று அதிகாலை இடி வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ். வல்வெட்டித்துறை கடலில் மீன்பிடிப்பதற்குச் சென்ற மீனவர்கள் இருவர் மீதே இடி வீழ்ந்துள்ளதாக வல்வெட்டித்துறை ஆதி கோவில் மீனவர் சங்கத் தலைவர் எம்.மதியழகன் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த தங்கவேலாயுதம் அருள்ராஜ் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அதே இடத்தைச் சேர்ந்த வல்லிபுரம் சிவபாலன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக