08 மே 2013

அசாத் சாலி கைது தொடர்பில் கோத்தாவின் ஆணவப்பேச்சு!

இனவாதி கோத்தபாய 
நாட்டில் கடும்போக்கைத் தூண்டுவோர் மீது அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி மட்டுமன்றி கடும்போக்குவாதத்தை தூண்டும் ஏனைய நபர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதம் ஏந்திய போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இளைஞர்களின் பருவக் கோளாறாக இந்த போராட்டத்தைக் கருதினார்.
எனினும், இறுதியில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தையும் கொலை செய்தார். அதுபோல தமிழகத்திற்கு சென்று அசாத் சாலி வெளியிட்ட கருத்தின் காரணமாகவே அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாக இருந்தாலும் நாட்டில் பாதுகாப்புச் செயலாளராக தாம் கடமையாற்றும் வரையில் கடும்போக்குவாதத்திற்கு இடமில்லை.
அசாத் சாலியினால் பிரபாகரனை உருவாக்க முடியாது. பிரபாகரன்கள் உருவாகுவதற்கோ அல்லது உருவாக்கப்படுவதற்கோ நான் இடமளிக்க மாட்டேன்.
தற்போது அசாத் சாலி கைது செய்யப்பட்டமைக்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் பற்றியும் நாம் நன்றாக அறிவோம் என தமிழின அழிப்பின் முக்கிய சூத்திரதாரியான கோத்தபாய தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக