24 மே 2013

தமிழர்களை வெளியேற்றிவிட்டு சிங்களவர்களை குடியேற்ற முயற்சி!

மன்னார் எழில்நகர் பகுதியில் குடியிருந்த தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு எடுபிடியாக செயற்படும் மன்னார் பிரதேச செயலாளர் டி.தயானந்தா இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்பகுதியில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களிடம் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக குடிசைகள் மற்றும் சுற்று வேலிகளை பிரித்து காணியை விட்டு வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். இதற்கான கடிதம் உரிய தரப்பினருக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மீறி தொடர்ந்தும் காணிகளில் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 600 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர் போன்ற கிராமங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே எமிழ் நகர் பகுதியில் அரச காணிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தம்மை வெளியேற்றி அந்த காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக