22 மே 2013

பொதுநலவாய நாடுகள் தலைர்கள் அமர்வை இலங்கையில் நடத்தக் கூடாது!

மங்கள சமரவீர 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாத என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளைப் பேணி பாதுகாப்பது தொடர்பில் மிக முக்கியமான பொறுப்புக்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 16 முக்கிய பிரகடனங்களையும் அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகவும், அந்தக் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்களுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் ஒடுக்கப்படும் நிலைமை இலங்கையில் நீடித்து வருவதாகவும் மங்கள
குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக