06 மே 2013

டக்ளசை விமர்சித்த சகாதேவன் மீது தாக்குதல்!

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இவர்கள் இன்று காலை முதல் விநியோகித்துள்ளனர்.
பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் தலா மூவராக சென்றவர்களே தாக்குதல்களை நடத்தியதாக சகாதேவன் தெரிவித்தார்.
தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பதாக வாகன தொடரணியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியால் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிரிக்கெட் மட்டைகள் மற்றும் மண்வெட்டி பிடிகளால் தாக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகிய இருவரும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கமானது வடக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக