13 மே 2013

இனத்துவேசி ஜாபிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றும் ஜாபீர் என்பவருக்கு எதிராக இன்றும் அவ்வைத்தியசாலை தாதிய
உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் மக்கள் நூறுவீதம் வாழும் இப்பகுதியில் அவ்வைத்தியசாலையை சீரழிக்கும் வகையில் செயற்படும் வைத்திய அத்தியட்சகர் ஜாபீரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பிரதேச மக்களும் அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.
இவ்வைத்திய அத்தியட்சகர் அங்கு பணியாற்றும் ஊழியர்களை பழிவாங்கி வருவதாகவும், தமிழ் பிரதேசத்தில் இருக்கும் வைத்தியசாலை என்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக