20 மே 2013

அத்திபாரம் தமிழரசுக்கட்சி என்கிறார் சேனாதிராஜா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திபாரமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டு அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி ஒன்றிணைத்து தமிழர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.
யாழ். வளைவு திறப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின்மாநாடு மல்லாகத்தில் நடைபெற்றபோது, தமிழரசுக் கட்சி கூட்டணியில் பிரதான பங்கேற்று செயற்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று இப்போது கூட்டமைப்பிலும் அத்திபாரமாக உள்ள தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளுக்கு சமநிலை வழங்கி அவற்றை அரவணைத்துச் சென்று தமிழர் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
தமிழரசுக் கட்சி எப்போதும் கூட்டமைப்பிலேயே இருக்கும். 1970 இல் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாகராசா என்பவர் யாழ். நகர முதல்வராக இருந்த போது கட்டப்பட்ட யாழ். வளைவு மீண்டும் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லூர் பிரதேசசபை மூலம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக