07 மே 2013

முல்லைத்தீவில் படைச் சிப்பாய் தற்கொலை!

தமிழர்களின் தாயகப் பிரதேசமாகிய முல்லைத்தீவை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைச் சிப்பாய் ஒருவன் நேற்று திங்கட்கிழமை தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
முல்லைத்தீவு மாஞ்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள காவலரணில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாயே தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்தவராவார்.
இந்த இராணுவச் சிப்பாயும் இன்னொரு சிப்பாயும் தினமும் காவல் கடமையில் ஈடுபடும் இடத்தில் குறித்த சிப்பாய் நேற்று பகல் 11 மணியளவில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தான் வைத்திருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் தனது தாடைப் பகுதியில் சுட்டுத் தற்கொலை செய்ததாக இவருடன் சேர்ந்து காவல் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றைய படைச்சிப்பாய் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவருடன் நின்ற மற்றைய சிப்பாயுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் இவர் தற்கொலை செய்துகொண்டாரா? ஆல்லது மற்றைய படைச் சிப்பாய்தான் இவரைச் சுட்டுக் கொன்றாரா? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக