28 பிப்ரவரி 2012

வெளிநாட்டு சக்திகளிடம் மண்டியிடப் போவதில்லை என கோத்தபாய தெரிவிப்பு.

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை கண்டு வெளிநாட்டு சக்திகளின் முன்னிலையில் மண்டியிடப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபாக்ச தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் சாட்டுக்களை சுமத்தி இலங்கையை பணயமாக வைத்து, வடக்கில் தமிழீழ ராச்சியத்தை உருவாக்க சில வெளிநாட்டு சக்திகளும், தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன.
நாட்டை பிளவு படுத்தி தனி இராச்சியத்தை அமைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தச் சக்திகள் தொடர்கின்றன.
போர்க் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைக் கொண்டு விசாரணை நடத்த முயற்சிக்கப்படுகிறது.
நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை பறிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
மீண்டும் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுகின்றது.மேற்குலக நாடுகளின் பிரிவினைவாத கோட்பாடுகளை முறியடிக்க சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக