22 பிப்ரவரி 2012

இனவாதம் பேசும் பிக்குவிற்கு உயர் பதவி!

குற்றச் செயல்கள் சிலவற்றுடன் தொடர்புடையவரும், சண்டியருமான பிக்கு ஒருவர் சுயாதீன காவல்துறை ஆணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ல குணவன்ஸ என அழைக்கப்படும் இவருக்கு சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவில் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இவர் அடிப்படையில் ஒரு பேரினவாதி. பேரினவாதம் பேசத் தொடங்கினால் நிறுத்தவே மாட்டார் என சுட்டிக்காட்டப்படுகிறது. இவரைப் போன்ற பிக்குமார் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நின்று சுயநல தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இவருக்கு காலம் சென்ற அமைச்சர் காமினி திஸநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததுள்ளது.
அப்போதைய காலகட்டத்தில் பிக்குமாருக்கு குணவன்ஸ கராட்டி வகுப்புக்களை ஏற்பாடு செய்து நடத்தி வந்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது, இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன், மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறார் அரசியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் இந்த பிக்கு முக்கிய பங்காற்றியவர் என்று டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சிங்க ரணசிங்க 1988 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் எழுதி உள்ளார்.
இவரைப் போன்றவர்கள் காவல்துறை ஆணைக்குழுவுக்கு நியமனம் பெற்றுள்ளமை நாட்டில் நிரந்தர சமாதானம், சகவாழ்வு, இன ஐக்கியம் ஏற்படும் என்கின்ற நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளதாக சில புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக