04 பிப்ரவரி 2012

காணி,காவல்துறை அதிகாரங்களை என்னிடம் ஒப்படைக்கவே மகிந்த விரும்புகிறார் என டக்ளஸ் தெரிவிப்பு!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் காணி, காவல்துறை அதிகாரங்கள் ஒப்படைப்பதற்கு தயக்கம் காட்டவில்லை என்றும் அது பிறர் கையில் சிக்குவதை அவர் விரும்பவில்லை என்றும் சிறிலங்கா அமைச்சரும் ஈபிடிபி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் கையில் இந்த அதிகாரங்களை கொடுத்தால் பிரச்சினையில்லை. ஆனால் அது பிறர் கையில் கிடைத்தால் சிக்கலாகி விடும் என்றே சிறிலங்கா அதிபர் நினைக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று ஈபிடிபி கருதுகிறதா என்று எழுப்பிய கேள்விக்கு அவர், அவசியமானது என்று பதிலளித்துள்ளார்.
ஆனால், இப்போது இந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்டாலே சந்தேகம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், சிங்கள சமூகங்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்பும் வரை, இப்போதைக்கு இந்த இரண்டு விவகாரங்களையும் கைவிட்டு வடக்கு,கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நலன்களை வீணடிப்பதாகவும், பல தேவையற்ற பிரச்சினைகளை அவர்கள் உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா.
ஊடகங்களுக்கு ஒன்றைச் சொல்லும் அவர்கள் இந்தியாவுக்கு மற்றொன்றை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக