08 பிப்ரவரி 2012

தமிழினப் படுகொலையாளனை விடுவிக்க தமிழ் மக்களும் ஆதரவு என்கிறார் மனோ!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்கள் இணைந்து கொள்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா நிறுத்தப்பட்ட போது எதிர்ப்பை வெளியிட்ட விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் இன்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருகின்றனர்.
சரத் பொன்சேகா ஓர் சாதாரண நபர் அல்ல. சட்ட ரீதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நாற்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர். அந்தக் காலத்தில் உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக ஆட்சியாளர்கள் சரத் பொன்சேகாவை வர்ணித்தனர் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் போராடுகிறார்கள்,ஆனால் மனோ கணேசனோ இன்னுமொரு குற்றவாளியை வெளியே கொண்டு வர தமிழ் மக்கள் ஆதரவு என்கிறார்.மனோ கணேசனின் போக்கு புரியாத புதிர்தான்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக