13 பிப்ரவரி 2012

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானம் கொண்டுவந்தது.

அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஸ்தாபிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி மியன்மார், ஈரான், சிரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் என்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் இருந்து அதிகரித்து வரும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐரோப்பிய காவல்துறை அமைப்பான யூரோபோல் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக