10 பிப்ரவரி 2012

சுதந்திரநாள் நிகழ்வுகளை விடுத்து வழிபாட்டில் ஈடுபட்டார் கோத்தபாய!

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் 64வது சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா மீதான அனைத்துலக நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கு வழிபாடு நடத்தவே அவர் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவின் சுதந்திர நாளான கடந்த 4ம் நாள் தனது மனைவி மற்றும் மகனுட ன் மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் அவர் வழிபாடு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபருக்கு அடுத்து ஆட்சியில் அதிகாரம் செலுத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்காமல், வழிபாட்டுக்காக சென்றது, போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் அவர் கொண்டுள்ள அச்சத்தை பிரதிபலிப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக